Sunday, July 24, 2005

அமெரிக்காவின் ஏமாற்று வேலை --- India Cheated

பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்தையொட்டி, இந்திய-அமெரிக்க நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பாதுகாப்பு உடன்படிக்கையில், இந்தியாவுக்கு சாதகங்களை விட பாதகங்கள் அதிகம் என்று தெரிகிறது. இம்மாதிரி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு சம்மந்தப்பட்ட sensitive-ஆன விஷயங்களில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி, முக்கிய கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முடிவு எடுக்க வேண்டியது "ஜனநாயக" நாட்டில் மிக அவசியம் !!!

இதில், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே ஒரே மாதிரி தான் செயல்படுகின்றன !!! இரண்டும், ஒரே (கலங்கிய!) குட்டையில் ஊறிய மட்டைகள் தாமே ! இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் சில பகுதிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இன்னபிற, அரசாங்கத்தை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தெரிய வராமல், கடைசி வரை ரகசியமாகவே இருக்கும் என்பது தெளிவு !!!! இதெல்லாம், இங்கு ஜனநாயகம் என்ற பெயரோடு நடக்கும் அராஜகப் போக்கு !

இடதுசாரி கட்சிகள், இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, காங்கிரஸ் தான்தோன்றித் தனமாக எடுத்த முடிவுகளைக் கண்டு மிகுந்த கோபத்தில் இருக்கின்றன. அதுவும், பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை திமிர் கூடாது !!! இடது சாரிகள் அரசாங்கத்துக்கான தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றால் கூட தவறில்லை என்று தான் தோன்றுகிறது. இவ்விஷயத்தில், இடதுசாரிகளின் நிலைப்பாடு நியாயமானது என்றே நினைக்கிறேன். வல்லுனர்களின் துணையோடு, நாம் வரையறுத்துள்ள அணு ஆராய்ச்சி திட்டத்தில் / பாலிஸியில் தலையிட்டு இந்தியாவின் கையை முறுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ள நமது அரசாங்கமும், மெத்தப் படித்த நமது பிரதமரும் கண்டனத்துக்குரியவர்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், நம் அரசாங்கம் விட்டுக் கொடுத்துள்ள இரண்டு முக்கிய உரிமைகள், நமக்கு மிகுந்த சங்கடத்தையும், பண விரயத்தையும் ஏற்படுத்த வல்லவை.
1. நமது அணு ஆற்றல் உற்பத்தி உலைகளை சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்த ஒப்புக் கொண்டது. நம் சுதந்திர செயல்பாட்டுக்கு இது குந்தகமானது.
2. நமது அணுவுலைகளை, ராணுவம் மற்றும் ராணுவம் சாரா தேவைகளுக்கு என்று வகைப்படுத்த ஆவன செய்ய ஒப்புக் கொண்டது. இது குறித்து, நமது தொழில்நுட்ப வல்லுனர்கள் மிகுந்த அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த சலுகைகளுக்கு பதிலாக, அமெரிக்கா இந்தியாவுக்கு உருப்படியாக ஏதும் தர/செய்ய இசைந்ததாகத் தெரியவில்லை, அமெரிக்கா நமக்கு தர முன் வந்த இரண்டு பெரிய(!) சலுகைகளைத் தவிர !!! அதாவது, இம்முறை நம் பிரதமருக்கு மிகப் பிரமாதமான, பிரம்மாண்டமான வரவேற்பு அளித்ததும், பிரணாப் முகர்ஜியை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்கு (ஜார்ஜ் பெர்னாண்டஸ் போல்!) உட்படுத்தாமல் விட்டதும் தான் !!!!

ஏதேச்சதிகார புஷ் தலைமையிலான அமெரிக்காவின் அடிவருட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏன் ஏற்பட்டது என்று யாராவது விளக்கினால் பரவாயில்லை! அதே போல், இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்களை விற்று, அமெரிக்கா இன்னும் கொழுக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளதா என்று அரசாங்கம் தெளிவுபடுத்தினால் நல்லது. ஏதேச்சதிகார போக்கில், 'ஜனநாயக' அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தோன்றவில்லை !! ஆனால், அமெரிக்காவுடன், நமக்கு பாதகம் இல்லாத வகையில், சமனான நல்லுறவு வைத்திருத்தல் தவறில்லை.

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

My comment in Badri's pathivu (http://thoughtsintamil.blogspot.com/2005/07/blog-post_112230016943246215.html) is saved here.

பத்ரி,
இதுவரை வந்த பின்னூட்டங்களை பார்க்கும்போது, எதிர்மறையாக எழுத சற்று பயமாக இருக்கிறது :)

நீங்கள் எழுதியுள்ள, இரானியன் பைப்லைன் மற்றும் பாகிஸ்தான் குறித்த கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடே. ஆனால்,
அமெரிக்காவுடனான பாதுகாப்பு/அணு உலைகள் குறித்த ஒப்பந்தம் குறித்து சில கேள்விகள் உள்ளன, IAEA ஆய்வுக்கு நமது உலைகளை உட்படுத்த ஒப்புக் கொண்டது தவிர்த்து!

1. Should the Govt. (in a democracy!) not discuss issues of vital national interest in parliament (or in a consultative meeting attended by representatives of major national parties and Experts) before having an agreement in place ? This is a minimum requisite, I guess!

2. Nuclear Experts are of the opinion that segregation of civil and military infrastructure is technically a onerous task that is highly cost prohibitive. No other major power like France, China seems to have done this. Can India afford to spend so much to get American fuel (?) for our reactors ? Is it not worthwhile to spend money and effort on alternate sources of energy ?

3. Will not our nuclear R&D be hampered as India has agreed for a moratorium on nuclear testing ? But the US and others (so called BIG FIVE) will jolly well do what they want to do !!!!!

இந்த ஒப்பந்தத்தால் சீனாவுக்கு பெருத்த மகிழ்ச்சி என்பதால், இடதுசாரிகள் கூச்சல் மட்டும் போட்டு விட்டு சும்மா இருந்து விடுவார்களா என்பதை போகப் போக பார்க்க வேண்டும் !!!

in the long run, America will make lot of money selling power and arms to India.

http://balaji_ammu.blogspot.com/2005/07/india-cheated.html

என்றென்றும் அன்புடன்
பாலா

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

ஜன நாயக நாடாக இருந்தாலும், மக்களுக்கு தேவையானதைச் செய்வதில் அரசியல்வாதிகள் எப்பொழுதுமே முன்னின்றதில்லை.

enRenRum-anbudan.BALA said...

கணேசன், Kangs

நன்றி !!!

கணேசன்,
உங்கள் சந்தேகங்கள் குறித்து உடனடியாக எதுவும் கூற இயலவில்லை. பின்னர் சொல்கிறேன்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails